கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. அதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்றின் காரணமாக, முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து தான் நடைபெற்றிருந்தது.

Advertisement

இந்நிலையில், இந்த முறை அனைத்து போட்டிகளும், இந்தியாவில் தான் நடைபெறும் என்பதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதனால், 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு, முழுமையாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் இது தான் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement

மொத்தமுள்ள 70 போட்டிகளில், 55 போட்டிகள், மும்பையின் மூன்று மைதானங்களான வான்கடே, பிராபவுர்ன் மற்றும் டிஒய் பாட்டில் மைதானங்களிலும், மீதமுள்ள 15 போட்டிகளை புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிசிசிஐயின் இந்த முடிவால், மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, முதல் பாதி போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றிருந்த போது, எந்த அணிக்கும் ஹோம் மைதானங்களில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் தகவல் தான், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பிராபவுர்ன் மற்றும் டிஒய் பாட்டில் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடுவது கூட தங்களுக்கு பிரச்சனை இல்லை என்றும், வான்கடே மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போட்டிகள் இருந்தால், நிச்சயம் அது மற்ற அணியினருக்கு தலைவலியாக இருக்கும் என்றும் ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற 9 அணிகளுக்கு, தங்களுடைய ஹோம் மைதானங்களில் ஆட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையான வான்கடே மைதானத்தில் அவர்கள் ஆட நேர்ந்தால், நிச்சயம் அந்த அணிக்கு மட்டும் பெரிய அளவில் சாதகமாக இருக்கும் என்பதே மற்ற அணியினரின் எதிர்ப்பாக உள்ளது.

Advertisement

மற்ற அணிகளின் முடிவு பற்றி ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் அதே வேளையில், ஐபிஎல் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்த மைதானத்தில் போட்டிகள் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News