ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பிய ருதுராஜ்; குஜராத்திற்கு 170 டார்கெட்!

Updated: Sun, Apr 17 2022 21:15 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா 3 ரன்களிலும், மொயீன் அலி ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் - அம்பத்தி ராயூடு ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தினர். 

இந்த சீசனில் இதுவரை சோபிக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிவந்த அம்பத்தி ராயூடு இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதனைத் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் போறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

அதிலும் லோக்கி ஃபர்குசன் வீசிய கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்களைச் சேர்த்தது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::