இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷஃபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

Advertisement

ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அஹ்மது 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடியில் ரஹமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹிம் ஸத்ரான் 87 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

Advertisement

அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 77 ரன்களும் கேப்டன் ஷாஹிதி 48 ரன்களும் எடுத்து 49 ஓவரில் ஆஃப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து ஆஃப்கானிஸ்தான் சரித்திர சாதனை வெற்றி பெற்றது. மறுபுறம் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி தலா 1 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

மேலும் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 275+ ரன்கள் கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை தகர்த்த ஆஃப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது. அந்த சரித்திர வெற்றியை ரஷித் கான் உள்ளிட்ட ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களுடன் கொண்டாடினார்கள்.

அந்த சமயத்தில் ஒரு இடத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் இப்போட்டியை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆஃப்கானிஸ்தான் அணியினர் வருவதை பார்த்த அவர் பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு ரஷித் கானுடன் சேர்ந்து கையை தூக்கி நடனமாடி கட்டிப்பிடித்து பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாடினார்.

 

Advertisement

அத்துடன் “ரஷித் கான் அவருடைய சத்தியத்தை முழுமை செய்து விட்டார். நான் என்னுடைய சத்தியத்தை முழுமை செய்து விட்டேன். சிறப்பாக விளையாடினார்கள் வீரர்களே” என்று ட்விட்டரில் அந்த நடனமாடிய புகைப்படத்தை பதிவிட்டு இர்ஃபான் பத்தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது பொதுவாகவே பாகிஸ்தான் ரசிகர்கள் ட்விட்டரில் அடிக்கடி வம்பிழுப்பதும் அதற்கு அவர் பதிலடி கொடுப்பது வழக்கமாகும். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News