ஆசிய கோப்பை தொடர் வரும் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் ஒரு தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியும் பங்கேற்கிறது.

Advertisement

இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாயின் ஷா அஃப்ரிடி, காயம் காரணமாக விலகினார். அவரின் விலகலால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதுவரை 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஃப்ரிடி, தற்போது வரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பாகிஸ்தானுக்காக கடந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றிருந்தார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி , பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்றதுக்கு காரணம் ஷாயின் ஷா அப்ரிடி தான்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவையும், 3வது ஓவரில் ராகுலையும் ஆட்டமிழக்க செய்தார் ஷாயின் ஷா அப்ரிடி. அந்த ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 31 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அஃப்ரிடி. இதனை வைத்து தான் தற்போது இந்திய வீரர்களை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் வம்பிழுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஷாயினுக்கு ஏற்பட்டுள்ள காயம், இந்திய அணியின் முன்வரிசை வீரர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும்.ஆசிய கோப்பையில் அப்ரிடியை காண முடியாதது வருத்தம் தான். மீண்டும் விரைவில் உடல் தகுதியை எட்ட வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை அவருடைய ஸ்பெஷல் இன்னிங்சை காட்டவில்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 70 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் வக்கார் யூனிஸ்க்கு ரோஹித் சர்மா தனது பேட் மூலம் பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement

 

அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், “ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் விலகியுள்ளது சில அணிகளுக்கு சாதகமாக இருக்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News