சஞ்சனா கணேசனுடன் புதிய இன்னிங்ஸைத் தொடங்கிய பும்ரா!

Updated: Mon, Mar 15 2021 17:06 IST
Image Source: twitter

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும், விளையாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசும் கோவாவில் இன்று (மார்ச் 15) திருமணம் செய்துகொண்டனர். இந்திருமணத்தில் பும்ராவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணம் குறித்து பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பினால் வழிநடத்தப்பட்ட நாங்கள் ஒன்றாக ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினோம். இன்று எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்களில் ஒன்றாகும்,மேலும் எங்கள் திருமணச் செய்திகளையும், எங்கள் மகிழ்ச்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தப் புதுமண தம்பதிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். சஞ்சனா கணேசின் தந்தை தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டு, அதன்பின் மகராஷ்டிரா மாநிலத்தில் குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் பார்க்கப்பட்டவை