ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் சீசனுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15ஆவது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் புதிய இரண்டு அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

Advertisement

அதன்படி அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாக வைத்து இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் விடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்கு கேப்டனாக விளையாடி வரும் கே.எல் ராகுல் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாட விரும்பவில்லை என்று தெரிகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் நிச்சயம் ஏலத்திற்கு சென்றால் 20 கோடி ரூபாய் வரை செல்வார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார். இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள லக்னோ அணி ராகுலை 20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேச்சுவார்த்தையும் ராகுலுடன் அவர்கள் நடத்தி வருவதாக தெரிகிறது.

அதன்படி ராகுல் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் நிச்சயம் 20 கோடி ரூபாய் கொடுத்து அவரை லக்னோ அணி வாங்கும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக 11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ராகுல் கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 600 ரன்களை அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News