Ipl 2022 mega auction
ஐபிஎல் தொடரைப் போன்றே ஏலத்தை விரும்பும் பிஎஸ்எல்!
ஐபிஎல் தொடரின் புகழ் மற்றும் வெற்றிகளை பார்த்து பாகிஸ்தான் சூப்பர் லீக் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் தொடங்கியது. ஐபிஎல் தொடர் 15 சீசன்களை நெருங்கிவிட்ட, நிலையில், பிஎஸ்எல் தொடர் தற்போது தான் 7 சீசன்களை தாண்டியுள்ளது.
இப்படிபட்ட சூழல் இருக்கையில், ஐபிஎல் தொடரில் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதை தடுக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஷ் ராஜா புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, ஐபிஎல் தொடரில் நடத்துவது போல் பிஎஸ்எல் தொடருக்கும் ஏலம் நடத்தப்படும் என்று கூறினார்.