ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று தொடங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மகேந்திர சிங் தோனி எனது சிறுவயது பயிற்சியாளர் மற்றும் எனது சகோதரரும் கூட என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா,“இந்த முறை மகேந்திர சிங் தோனி எங்களுடன் இல்லை. அதனால் எல்லாம் என் தோள்களில் தான் உள்ளது. அது எனக்கு கூடுதல் சவாலாக இருக்கும்.
அதேசமயம் தோனி ஆரம்பத்திலேயே என்னை நன்கு புரிந்தகொண்டவர். நான் எப்படிப்பட்ட நபர், எனக்கு பிடிக்காத விஷயங்கள் என அனைத்து விஷயங்களை அவர் அறிவார்” என்று தெரிவித்துள்ளார்.