ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்த எம் எஸ் தோனி!

Updated: Mon, Jun 06 2022 17:30 IST
MS Dhoni Takes An Investment Shot In Drone-As-A-Service In Garuda Aerospace (Image Source: Google)

இந்தாண்டு ஐபிஎல்-ல் சரிவில் இருந்த சிஎஸ்கே அணிக்கு, தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று நம்பிக்கை கொடுத்துள்ளார். அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்பது போன்று உறுதி கொடுத்து சென்றார்.

இந்நிலையில் கிரிக்கெட்டை ஒதுக்கிவிட்டு, தோனி தனது அடுத்த பணிகளில் களமிறங்கியுள்ளார். ஓய்வுக்கு பிறகு தோனி, ஆடை நிறுவனம், மதுபானம், விவசாயம் என பல தொழில்களில் கலக்கி வருகிறார். தற்போது ட்ரோன்களிலும் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளார். அதுவும் விவசாயத்திற்காகவாம்.

சென்னையை சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான "கருடா ஏரோ ஸ்பேஸ்" -ல் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் விவசாயத்திற்கு உதவும் நவீன ட்ரோன்களை உற்பத்தி செய்யவுள்ளது. தோனி ஏற்கனவே விவாசயம் செய்துவரும் சூழலில், இனி நாடு முழுக்க விவசாயத்திற்கு ட்ரோன்கள் தான் உதவும் என்ற கணிப்பில் பணத்தை போட்டுள்ளார்.

இந்தியாவில் குறைந்த விலையில் ட்ரோன்களை தயார் செய்யும் நிறுவனங்களில் கருடாவும் முக்கியமான ஒன்று. இதே போன்று இந்த நிறுவனத்தின் "பிராண்ட் அம்பாசிடர்", அதாவது விளம்பர தூதராக எம்.எஸ்.தோனி செயல்பட போவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பேசிய தோனி, “கருடா வான்வெளி அமைப்பில் நானும் ஒரு பங்குதாரராவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது புதுமையான முயற்சியை பாராட்டுகிறேன். மேலும் அவர்களது வளர்ச்சியினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

முன்னதாக இந்த நிறுவனம் குறித்து எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டரில் குறிப்பிட்டு கவுரப்படுத்தியிருந்தார். இதே போல சமீபத்தில் நடைபெற்ற பாரத் ட்ரோன் மகா உத்சவ் நிகழ்ச்சியில் இந்த நிறுவனத்தின் தலைவர்கள், பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை