இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும், சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார் 22 வயது அர்ஜுன் டெண்டுல்கர். 

Advertisement

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்துவந்தாலும், அந்த அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருப்பதால், அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை.

Advertisement

உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதுவும் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2020-2021 சையத் முஷ்டாக் அலி தொடரில் ஹரியானா மற்றும் பாண்டிச்சேரி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடினார் அர்ஜுன் டெண்டுல்கர்.

ரஞ்சி தொடருக்கான மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தபோதிலும், அவருக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதற்காக மும்பை அணியின் தலைமை தேர்வாளர் சலில் வருத்தம் தெரிவித்தார்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஐபிஎல்லிலும் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்திய அணியின் வலைப்பந்துவீச்சு பந்துவீச்சாளராகவு இருந்திருக்கிறார் அர்ஜுன் டெண்டுல்கர். ஆனால் அவருக்கு உள்நாட்டு போட்டிகளிலும் சரி, ஐபிஎல்லிலும் சரி, விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காததால் அவரது திறமையை வெளிக்காட்ட முடியாத சூழல் இருக்கிறது.

எனவே தனக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் அணியில் இணைந்து, களத்தில் தனது திறமையை காட்டி, அனைவருக்கும் தனது திறமையை நிரூபிக்க நினைத்த அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணியில் இணைகிறார். 

Advertisement

இதற்காக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கரின் எதிர்காலமும் நலனும் கருதி அவருக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுவிடும். அதனால், இந்த ஆண்டு நடக்கும் உள்நாட்டு தொடர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News