சர்ச்சைகுள்ளான ஷாகிப் ஹல் ஹசனின் அவுட்; நடுவரின் தீர்ப்பால் சலசலப்பு! 

Updated: Sun, Nov 06 2022 12:37 IST
Netizens slam umpires over Shakib Al Hasan's DRS shocker against Pakistan (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் 41ஆவது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

போட்டியில் 10ஆவது ஓவரை ஷதாப் கான் வீசினார். 10.4 ஓவரில் ஷதாப் கான் வீசிய பந்தில்20 ரன் எடுத்திருந்த சௌமியா சர்கார் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தது.

இதையடுத்து, அடுத்த விக்கெட்டிற்கு வங்கதேச கேப்டன் ஷாகீப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் ஷதாப் கான் வீசிய பந்தை எதிர்க்கொண்டார். ஷாகீப் முதல் பந்தை எதிர்க்கொண்ட நிலையில் அதில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார்.

ஷாகீப்பிற்கு எதிராக ஷதாப் கான் நடுவரிடம் எல்.பி.டபுள்யூ அவுட் கேட்க அவர் அவுட் கொடுத்தார். இதையடுத்து, நடுவரின் முடிவுக்கு எதிராக ஷாகீப் ரிவ்யூ எடுத்தார். ரிவ்யூவில் ஷகீப் பேட்டில் பந்து படுவது போன்று காட்சிகள் தெரிந்தது.

ரிவ்யூ செய்தபோது ஷகீப்பின் பேட்டிற்கும் தரைக்கும் சிறிது இடைவெளி இருப்பதும், பந்தின் மீது பேட் உரசுவதற்கான காட்சிகளும் தெளிவாக தெரிந்தது. ஆனாலும், 3ஆம் நடுவர் ஷகீப் அல் ஹசனுக்கு அவுட் கொடுத்தார். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

ரிவ்யூவிலும் அவுட் கொடுத்ததால் ஷாகீப் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். ஷாகீப் அல் ஹசனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேசம் நிர்ணயித்த 128 ரன்கள் எடுத்து அரையிறுதிக்குள் நுழையும் நோக்கத்தோடு பாகிஸ்தான் விளையாடி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை