ஐபிஎல் 2022: இனி பொறுமையைக் கடைபிடிப்பேன் - சஞ்சு சாம்சன்

Updated: Wed, Mar 30 2022 13:15 IST
No Long Time Goals, Happy To Contribute To Team’s Victory – Sanju Samson (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

போட்டி முடிந்த பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், "இந்த விக்கெட் சற்று வித்தியாசமாக இருந்தது. டெஸ்ட் மேட்சை போல குட் லெந்தில் பந்து வீசுவது வேகபந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் உதவியது. நாங்கள் நீண்ட கால இலக்குகள் வைத்துக்கொள்ள போவதில்லை. முடிந்தவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிப்போம்.

இந்த சீசனுக்கு முன் நான் எனது உடற்தகுதியிலும், சூழல்களை புரிந்து கொள்வதிலும் தான் கவனம் செலுத்தினேன். இனி முடிந்தவரை பொறுமையாக விக்கெட் விடாமல் விளையாட முயற்சிப்பேன். ஏனென்றால், பிறகு எப்போது வேண்டுமானாலும் நான் ஆட்டத்தின் வேகத்தை கூட்டலாம். 

ஒவ்வொரு சீசனுக்கு முன்பும் பெரிய கனவுகளுடன் தான் வருகிறோம். ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த போகிறோம். எங்கள் அணி உரிமையாளர்கள் எங்களுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. எங்களை சுதந்திரமாக விளையாட வைக்கிறார்கள். நிச்சயம் அடுத்த போட்டியிலும் வெற்றியை தொடர உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை