இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. 

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வயிற்று வலி காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடாமல் வெளியில் அமர்ந்துள்ளார். அவருக்கு பதிலாக இந்த போட்டியில் ஹனுமா விஹாரி விளையாடினார். இருப்பினும் அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் விளையாட தயாராகி அணியில் இணைவார் என்பதனால் மிடில் ஆர்டரில் ஒரு வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக நிச்சயம் யாராவது ஒருவர் வெளியேற வேண்டும் அப்படி எந்த வீரர் வெளியேறப்போகிறார் என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் இருவரும் அரை சதம் அடித்துள்ளனர்.

அதேவேளையில் தொடர்ந்து தனது டெஸ்ட் அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் விஹாரியும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்சில் நாட் அவுட்டாக 40 ரன்களை குவித்திருந்தார். இதன் காரணமாக ரஹானே அல்லது விஹாரி ஆகிய இருவரில் ஒருவர்தான் நீக்கப்படும் இடத்தில் இருப்பதாக தெரிகிறது. அப்படி இந்த இருவரில் யார் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரகானே கடந்த சில ஆண்டுகளாகவே சற்று சுமாராகத்தான் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்தாலும், விஹாரியும் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் குவித்துள்ளார். அது மட்டுமின்றி வெளிநாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்காக கணிசமான ரன் குவிப்பை பின்வரிசையில் வழங்கி வருகிறார்.

இதன் காரணமாக நிச்சயம் விஹாரியை அடுத்த போட்டியில் தக்க வைக்க வேண்டும். அதனால் ரஹானேவை வெளியேற்றிவிட்டு அந்த இடத்திற்கு கோலியை கொண்டுவர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News