கரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசீத் கிருஷ்ணா; நாளை இந்திய அணியுடன் இணைகிறார்!

Updated: Sat, May 22 2021 22:37 IST
Image Source: Google

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணா. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது பயோ பபுளில் இருந்த பிரசீத் கிருஷ்ணாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இதற்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இவர் இடம் பிடித்திருந்தார். ஆனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்வாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. 

இந்நிலையில் பிரசீத் கிருஷ்ணாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து இவர் நாளை (மே 23) பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை சென்று, சக அணி வீரர்களுடன் தனிமைப்படுத்தப்படவுள்ளார். மும்பை விமான நிலையம் செல்லும் பிரசீத் கிருஷ்ணாவுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை