பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றிப்பெற்று தொடரை வென்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று கராச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஹாசினி பெரேரா - கேப்டன் அத்தபத்து இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.

இதில் 24 ரன்களில் ஹாசினி பெரேரா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 37 ரன்களில் அத்தபத்தும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணியில் முனிபா அலி 25, இரம் ஜாவத் 10, ஒமைமா சொஹைல் 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆலியா ரியாஸ் 17, ஆயிஷா நசீம் 10, நிதா தார் 14 ரன்கள் என தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினர். இறுதியில் கேப்டன் பிஸ்மா மரூஃப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் கடைசி பந்தில் பாகிஸ்தான் மகளிர் அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News