'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல்

Updated: Fri, Mar 19 2021 10:24 IST
Cricket Image for 'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல் (Parthiv Patel (Image Source: Google))

இந்தியாவின் உள்ளூர் டி20 திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 56 லீக் போட்டிகாள் நடைபெறவுள்ளன. லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்கைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதவுள்ளன. 

இந்நிலையில், இத்தொடரின் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியாறியது. இதையடுத்து நடப்பு சீசனுக்கான பயிற்சிகளை சென்னை வீரர்கள் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருச்சீட்டாக அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பார்த்தீவ் படேல், "கடந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததற்கான காரணம், தொடக்கத்தில் அந்த அணி வெற்றிகளைப் பெறத்தவறியது தான். ஆனால், கடைசி ஒரு சில போட்டிகளில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க் வாட் சில அற்புதமான இன்னிங்ஸ்களைக் கொடுத்து அணியை வெற்றிப் பெறச்செய்திருந்தார். இந்நிலையில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா களமிறங்கவுள்ளதால், அவர் நிச்சயம் அணியின் துருப்புச்சீட்டாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடர்களில் அவரது ஆட்டத்தை நாம் கண்டிருக்கிறோம். 

 

மேலும், உள்ளூர் போட்டிகளில் கெய்க்வாட் சிறப்பாக விளையாடியுள்ளார். அதேசமயம் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது. இதனால் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தனிப்பட்ட காரணங்களால் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து முழுவதுமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை