பிஎஸ்எல் 2022: சோயிப் மாலிக் அதிரடியில் 174 ரன்களை இலக்காக நிர்ணயித்த பெஷ்வர் ஸால்மி!

Updated: Fri, Feb 04 2022 21:48 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷ்வர் ஸால்மி அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பெஷ்வர் ஸால்மி அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - காம்ரன் அக்மல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

பின் காம்ரன் அக்மல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, ஸஸாய் 41 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஹைதர் அலியும் 16 ரன்களோடு நடையைக் கட்டினார்.

இதையடுத்து களமிறங்கிய சோயிப் மாலிக் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷ்வர் ஸால்மி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோயிப் மாலிக் 52 ரன்களைச் சேர்த்தார். கராச்சி கிங்ஸ் தரப்பில் உமைத் ஆசிஃப்  3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை