பிஎஸ்எல் 2022: கலந்தர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது கராச்சி கிங்ஸ்!

Updated: Sat, Feb 19 2022 12:23 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 39 ரன்களைச் சேர்த்தார். கலந்தர்ஸ் அணி தரப்பில் ஸமான் கான், ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய கலந்தர்ஸ் அணி ஆரம்பத்திலேயே ஒருசில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அதிரடியாக விளையாடிய முகமது ஹபீஸ் 33 ரன்களிலும், டேவிட் வைஸ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கராச்சி அணி தரப்பில் மிர் ஹம்ஸா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி இத்தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை