பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புரவலரும், பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை.

Advertisement

இதனனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரமீஸ் ராஜா பிசிபி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

பிசிபி தலைவராக ரமீஸ் ராஜா 3 ஆண்டுகள் செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென ரமீஸ் ராஜா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜாம் சேதி நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நஜான் சேதி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் பிசிபி தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா விரைவில் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2017ம் ஆண்டு பிசிபி தலைவராக நஜாம் சேதி நியமிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் 2013 - 2014 ஆகிய ஆண்டுகளில் நஜாம் சேதி பிசிபி தலைவராக பணியாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் பதவியில் மாற்றம் வரப் போவதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து பிசிபி தலைவர் ரமீஸ் ராஜாவ்டம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பிசிபி தலைவர் பதவி மாற்றம் என்று பரவும் தகவல்கள் வதந்தி மட்டுமே. இப்போதைக்கு, இந்தப் பதிவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில் பிசிபி நிர்வாக பிரச்சினையால் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு வருமோ என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். அதேபோல் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகம் இருப்பதால், உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக பிரச்சினை எழுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News