கடந்த 2007 ஜனவரியில் 52ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடிய சேவாக் தனது 53வது போட்டியை 2008இல் ஆஸ்திரேலியாவில் விளையாடினார். 

Advertisement

பிறகு, கும்ளே தலைமையில் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் சேவாக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முதலிரண்டுப் போட்டிகளில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது. 

Advertisement

மூன்றாவதுப் போட்டியில் 63 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தியா வெற்றிப் பெற்றது. நான்காவதுப் போட்டியில் 151 ரன்களை எடுத்தார். அது இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பற்றியது. அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதுகுறித்து பேசிய சேவாக், “நான் அப்போது டெஸ்டில் 10,000 ரன்களை கடந்திருந்தேன். திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து எனது பெயர் இல்லாமல் போனது கஷ்டமாக இருந்தது”. 

“முதலில் எடுத்த 60 ரன்கள்தான் நான் வாழ்கையிலே கஷ்டப்பட்டு எடுத்த ரன்களாகும். ஏனெனில் என்னைத் தேர்ந்தெடுத்ததுக்காக கும்ப்ளே யாரிடமும் அவமானப்படக்கூடாது என விரும்பினேன். விளையாடும் போது கவனமாக ஆடினேன். மறுபுறத்திலிருக்கும் போது நடுவர்களிடம் பேசுவேன். எனக்கு பிடித்தமான பாடலை முனகுவேன். அழுத்தம் குறைந்தது”. 

அந்தத் தொடர் முடிந்ததும் கும்ப்ளே, “ நான் டெஸ்ட் கேப்டனாக நீடிக்கும் வரை உன்னை அணியிலிருந்து நீக்கமாட்டேன்” எனக் கூறினார். “அதுதான் ஒரு வீரருக்குத் தேவை. இதற்கு முன்பு கங்குலி தலைமையில் நான் இவ்வாறு பாதுகாப்பாக உணர்ன்ந்தேன்”.

Advertisement

“அந்தத் தொடரில் அனில் கும்ப்ளே கேப்டனாக இல்லையெனில் அந்தத் தொடரே கைவிடப்பட்டிருக்கும். மேலும், என்னுடையது மட்டுமில்லாமல் ஹர்பஜன் சிங் கிரிக்கெட் வாழ்க்கையும் அத்தோடு முடிந்திருக்கும்” என சேவாக் கூறினார்.

மேலும் சேவாக் தனது சிறந்த பவுலிங் 5/ 104 சாதனையை கும்ப்ளே தலைமையில் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News