இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி கள்மிறங்கிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் அவருடன் விளையாடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 12, தனஞ்செய டி சில்வா 1, ராஜபக்ஷ 5, மெண்டிஸ் 10 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினர்.
பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேராவும் 39 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஃபோர்டூய்ன், ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.