சையத் முஷ்டாக் அலி: சூப்பர் ஓவரில் கர்நாடகா த்ரில் வெற்றி!

Updated: Thu, Nov 18 2021 17:45 IST
SMAT 2021 Quarter Final 2: Karnataka beat Bengal by super over thriller (Image Source: Google)

சையித் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது காலிறுதிச்சுற்று போட்டியில் கர்நாடகா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய கர்நாடக அணி கருண் நாயரின் அதிரடியினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கருண் நாயர் 55 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் இலக்கை துரத்திய பெங்கால் அணி விருத்திக் சாட்டர்ஜி, ஷபாஷ் அஹ்மத் ஆகியோரின் அதிரடியாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது. 

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணியால் 5 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. அதனைத் எதிர்கொண்ட கர்நாடகா அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிந்ததார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் கர்நாடக அணி சூப்பர் ஓவர் முறையில் பெங்கால் அணியை வீழ்த்தி, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை