கிரிக்கெட் விளையாட்டில் உடற்தகுதி என்பது ஒவ்வொரு வீரருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி கிரிக்கெட் அணிகளும் உடல் தகுதிக்கு முக்கியத்துவம் தர தொடங்கிவிட்டன.

Advertisement

இந்தியாவில் யோ யோ டெஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி பெற்றால் மட்டுமே அணியில் இடம் என்ற நிலை கொண்டு வரப்பட்டது.

Advertisement

கிரிக்கெட்டுக்கு உடல் தகுதி முக்கியம் தான்.ஆனால் இதனைதீவிரமாக கடைபிடிக்க கூடாது என்றும், அப்படி செய்து இருந்தால் லட்சுமணன், சச்சின்,சேவாக் போன்ற வீரர்கள் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் சிலர் யோ யோ உடல்தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் உடல்தகுதி தேர்வை தீவிரப்படுத்தினர். அந்த மாற்றத்திற்கான வெற்றி களத்திலும் தென்பட்டன. தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அந்தநாட்டு வாரியம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், உடல் தகுதிக்கான வரம்புக்குள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு, அந்நாட்டு வீரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் தற்போது உடல் தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்தும் முயற்சியில் இது ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணி மோசமாக விளையாடி வந்தது. இதனால் அந்த நாட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த முயற்சியால் டி20 உலகக் கோப்பை போட்டியில் குறிப்பிட தகுந்த வெற்றி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி என்று முன்னேறி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News