இளம் வீரர்களுடன் அவரை ஒப்பீடாதீர்கள் - சல்மான் பட்!

Updated: Tue, Nov 23 2021 12:18 IST
Suryakumar Yadav Should Be More Consistent - salman Butt (Image Source: Google)

அடுத்தாண்டு டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்திய அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அறிமுகமாகி அபாரமாக ஆடினர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும், சிறப்பான பவுலிங்கும் தான் காரணம். 

முதல் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ், 2ஆவது போட்டியில் ஒரு ரன்னிலும், 3ஆவது போட்டியில் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் இன்னும் அவரது ஷாட் செலக்‌ஷனில் முதிர்ச்சியடையவில்லை. மோசமான ஷாட் செலக்‌ஷனில் ஆட்டமிழந்துவிடுகிறார்.

மிடில் ஆர்டர் வீரர்கள் நிலைத்தன்மையுடன் ஆடுவதில்லை. எப்போது எந்த வீரர் சொதப்புவார் என்று தெரியாத அளவிற்கு திடீரென ஏமாற்றிவிடுகின்றனர். தவறான நேரத்தில், தேவையே இல்லாமல் தவறான ஷாட் செலக்‌ஷனால் ஆட்டமிழந்துவிடுகின்றனர்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னையாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை, இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருடன் ஒப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார் சல்மான் பட்.

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், “சூர்யகுமார் யாதவ் நிறைய உள்நாட்டு போட்டிகளில் ஆடியுள்ளார். அவரது வயது 30க்கு மேல். இந்த வயதில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக பக்குவப்பட்டிருப்பார். எனவே அதிக அனுபவம் கொண்ட சூர்யகுமார் யாதவை, அனுபவம் குறைவான இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட்டுடன் ஒப்பிடக்கூடாது. அதனால் சூர்யகுமார் யாதவ் நிலைத்தன்மையுடன் ஆடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை