ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் அணியிலிருந்து இளம் வேகப்பந்துவீச்சாளர் விலகல்!

Updated: Thu, May 05 2022 12:17 IST
Image Source: Google

நடப்பாண்டு ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி, 9 ஆட்டங்களில் 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தின் போது செளரப் துபே என்கிற வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இதையடுத்து ஜார்கண்ட் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சுசாந்த் மிஸ்ராவைத்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது.

கடந்த 2020இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றவர் சுசாந்த் மிஸ்ரா. 5 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். தற்போது ரூ. 20 லட்சத்துக்கு மிஸ்ராவைத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை