டி20 உலகக்கோப்பை: ராகுல், ரோஹித்தின் ஆட்டம் தன்னை வியக்கவைத்தது - சச்சின் டெண்டுல்கர்

Updated: Thu, Nov 04 2021 14:04 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாளு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

உதில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழத்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா - கேஎல் ராகுலின் ஆட்டம் தன்னை வியக்கவைத்ததாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேஸ்பக்கத்தில் பேசிய சச்சின், “நேற்றைய போட்டி இந்திய அணிக்கு பெரிய போட்டியாக இருந்தது, அது எங்களுக்கு மிகவும் தேவைப்பட்டது. ரோஹித்தும் ராகுலும் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுடன் தொடங்கிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்திலிருந்தே தவறாகப் புரிந்துகொண்டது. 

Also Read: T20 World Cup 2021

வழக்கமாக, நீங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுடன் தொடங்கலாம் ஆனால் இன்றைய ஆட்டத்தில், விக்கெட் மேற்பரப்பில் புல் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் சீமர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருப்பார்கள் என்று சொல்வேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை