இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட்  தொடரில் தென் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது .

Advertisement

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி  தொடங்கியது. டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்கா ஏ அணியின்  கேப்டன் பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார்.

Advertisement

அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ  அணி  முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .சிறப்பாக விளையாடிய சரேல் ஏர்வி 75 ரன்கள் எடுத்தார்  .இந்திய அணி தரப்பில் தீபக் சாகர் 4 விக்கெட்களையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , கைப்பற்றினர். 

இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சற்று தடுமாறியது. . பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹனுமா விஹாரி - இஷான் கிஷான் இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி  63 ரன்களிலும் , இஷான் கிஷன் 91 ரன்களிலும்  ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் குவித்தது.

அதன்பின் 8 ரன்கள் பின்தங்கிய நிலையில்  இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென் ஆபிரிக்க அணி 3 வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. 

Advertisement

இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம்  ஆட்டத்தில்  தென் ஆப்பிரிக்கா ஏ அணி 3 விக்கெட்  311 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. சிறப்பாக விளையாடிய தென் ஆபிரிக்க வீரர் ஜுபைர் ஹம்சா  சதம்  அடித்தார். 

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய   இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகளை  இழந்து  90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனது . 

தென் ஆப்பிரிக்கா ஏ ,இந்திய ஏ அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளுமே டிராவில் முடிந்ததால், கோப்பை இரு அணிக்கு வழங்கப்பட்டது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News