டிஎன்பிஎல் எலிமினேட்டர்: மீண்டும் மிரட்டிய சாய் சுதர்சன்; திண்டுக்கல்லுக்கு 144 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Aug 11 2021 21:17 IST
Image Source: Google

டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கோவை அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ 5 ரன்களிலும், சுரேஷ் குமார் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வெங்கட்ரமனன், முகலேஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின் சாய் சுதர்சனுடன் இணைந்த கேப்டன் ஷாருக் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அரைசதம் கடந்தார்.

இதன் மூலம் 20 ஓவர்களை முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்சன் 57 ரன்களை சேர்த்தார். திண்டுக்கல் அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை