டிஎன்பிஎல் 2021 : திருப்பூர் அணிக்கு 185 ரன்களை இலக்காக மதுரை பாந்தர்ஸ்!

Updated: Mon, Aug 02 2021 21:26 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் போட்டி மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

இதையடுத்து களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு பிரவின் குமார் - சுஜிந்திரன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் சுஜிந்திரன் 20 ரன்களில் ஆட்டமிழக்க, பிரவின் குமாரும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அனிருத் சிதா ராம் - ஜெகதீசன் கௌசிக் இணை அபாரமனா ஆட்டத்தை வெளிப்பத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, அடுத்து களமிறங்கிய சத்துர்வெத்தும் 4 சிக்சர்களை பறக்கவிட்டு அசதினார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சத்துர்வெத், ஜெகதீசன் கௌசிக் ஆகியோர் தலா 41 ரன்களைச் சேர்த்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை