டிஎன்பிஎல் 2021: ராஜகோபால் அதிரடியில் சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி!

Updated: Sun, Aug 08 2021 23:00 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 55 ரன்களைச் சேர்த்தார். திருச்சி அணி தரப்பில் சர்வன் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலைக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி அணியில் சத்விக் 5 ரன்களிலும், சந்தோஷ் ஷிவ் 25 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த நித்திஷ் ராஜகோபால் - ஆதித்யா கணேஷ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. 

அதில் நித்திஷ் ராஜகோபால் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை