டிஎன்பிஎல் 2021: ஆதன் கான் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்ற திருச்சி!

Updated: Sun, Jul 25 2021 20:14 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய மதுரை அணி ஜெகதீசன் கௌசிக்கின் நிதான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது. 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அதித்தியா கனேஷ் - ஆதன் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

இதில் ஆதன் கான் அரைசதம் கடந்தார். இதன் மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி, நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை