டிஎன்பிஎல் 2021: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த திருச்சி!

Updated: Thu, Jul 29 2021 23:06 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 14 ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி, எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனால் 20 ஓவர்கள் மிடிவில் 8 விக்கெட்டுகளை 110 ரன்களை மட்டுமே எடுத்தது. திருச்சி அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணியில் சத்வித், முகுந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ராஜகோபால் - ஆதித்யா கணேஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம் 17.5 ஓவர்களிலேயே ரூபி திருச்சி வாரியர்ஸ் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ராஜகோபால் 47 ரன்களையும், ஆதித்யா கணேஷ் 43 ரன்களையும் சேர்த்தனர். 

இந்த வெற்றியின் மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 புள்ளிகளைப் பெற்று நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை