டிஎன்பிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் , திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விகெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியில் சிலரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Advertisement
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.