டிஎன்பிஎல் 2021: திருச்சி அணிக்கு 138 ரன்கள் இலக்கு!

Updated: Sun, Jul 25 2021 17:17 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் அதிரடி வீரர்கள் அருண் கார்த்திக் 17 ரன்களிலும், ராஜ்குமார் 18 ரன்களிலும் அட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ராமலிங்கம், சதுர்வேத் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மதுரை அணி தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த அனிருத் சீதாராம் - ஜெகதீசன் கௌசிக் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 6விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. 

மதுரை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் கௌசிக் 44 ரன்களையும், அனிருத் சீதாராம் 36 ரன்களையும் சேர்த்தனர். திருச்சி அணி தரப்பில் சர்வண் குமார், மதிவண்ணன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை