ஐபிஎல் 2022: டேவிட் மில்லரை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, May 25 2022 12:52 IST
Image Source: Google

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. இதனால் குஜராத் அணிக்கு 189 ரன் இலக்காக இருந்தது.

பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. புதுமுக அணியான குஜராத் தனது முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதித்தது.

குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லரை கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

ரஷீத்கான் பந்து வீச்சு நன்றாக இருந்தது. மீண்டும் அவருக்கு பந்து வீச்சில் நல்ல நாளாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் அவர் கிரிக்கெட் பயணம் அற்புதமாக இருந்தது. இந்த போட்டித் தொடரில் டேவிட் மில்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன். நான் எனது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை சமநிலைப்படுத்த தொடங்கி விட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக இது ஒரு நிலையான முயற்சியாகும். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற குடும்பம் உதவியது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை