உத்ராகாண்ட் மாநிலத்தின் விளம்பர தூதராக ரிஷப் பந்த் நியமனம்!

Updated: Sun, Dec 19 2021 22:08 IST
Uttarakhand govt appoints Rishabh Pant as state brand ambassador (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். தனது அதிரடியான பேட்டிங் திறனால் மூன்று வகையிலான இந்திய அணியின் பிரதான வீரராக இவர் செயல்பட்டு வருகிறார்.

மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் இந்திய அணியையும் அடுத்த சில ஆண்டுகளில் வழிநடத்துவார் என்ற கருத்துகளுல் உலா வருகின்றன. 

இந்நிலையில் உத்ராகாண்ட் அரசு, ரிஷப் பந்தை தங்கள் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமித்துள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும், இளைஞர்களின் உத்வேகமுமான, உத்தரகாண்டின் லால் ஸ்ரீ ரிஷப் பந்த், மாநில இளைஞர்களை விளையாட்டு மற்றும் பொது சுகாதாரத்தில் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "மாநில விளம்பர தூதராக" நமது அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை