டி20 உலகக்கோப்பை: போட்டியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்கள்!

Updated: Sun, Oct 24 2021 19:41 IST
VIDEO: Sri Lanka's Kumara Involves Himself In A Verbal Spat With Bangladesh's Liton Das (Image Source: Google)

டி20 உலகக் கோப்பையின் இன்று நடைப்பெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கசே அணிகள் விளையாடின. இப்போட்டியில் இலங்கை அணி 172 ரன்களை எடுத்து வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் பவர் பிளேவின் கடைசி ஓவரில் லஹிரு குமார் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஷனாகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்தவுடன் லிட்டன் தாஸை நோக்கி லஹிரு குமாரா ஆக்ரோஷமாக பேசி நடந்தார். லிட்டன் தாஸும் பதிலுக்குக் கடுமையாகப் பேச வாக்குவாதம் ஏற்பட்டது. முகமது நைம் வாக்குவாதத்தை விலக்கிவிட குமாரைத் தள்ளினார்.

இதன்பிறகு, இலங்கை வீரர்கள், நடுவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பி வைத்தனர். எனினும், லிட்டன் தாஸை பேட்டை உயர்த்தி எதையோ சொல்ல குமாரா மீண்டும் ஆக்ரோஷமாக சண்டையிட முற்பட்டார். இதனால், ஆட்டத்தின் நடுவே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஏற்கெனவே, நிதாஹஸ் தொடரில் இலங்கை, வங்கதேச வீரர்கள் மோசமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிதளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை