விஜய் ஹசாரா கோப்பை: காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடக அணிகள் மோதல்!

Updated: Mon, Dec 20 2021 16:18 IST
Image Source: Google

விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கோப்பைக்கான இறுதிக்கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் முடிந்தது.

அதன்படி தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, விதர்பா, கேரளா, சர்வீசஸ் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

கால் இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. இதில் தமிழ்நாடு அணி காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் தமிழ்நாடு அணி விளையாடிய லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது. முன்னதாக தமிழ்நாடு அணி ஏற்கனவே லீக் ஆட்டத்தில் கர்நாடகாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

இதனால் நம்பிக்கையுடன் விளையாடி அந்த அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

நாளை நடைபெறும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம்- உத்தர பிரதேசம் அணிகள் மோதுகின்றன. 22ஆம் தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் சவுராஷ்டிரா- விதர்பா, கேரளா- சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் 24ஆம் தேதி அரை இறுதி போட்டிகளும், இறுதிப் போட்டி 26ஆம் தேதியும் நடைபெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை