லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்த இந்திய வீரர்கள்!

Updated: Sun, Feb 06 2022 14:16 IST
Image Source: Google

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார்.

காலை 8 மணியளவில் உயிர் பிரிந்த நிலையில், அவரது உடல் தற்போது மருத்துவமனையிலிருந்து மும்பையிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பிற்பகல் 3.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் சிவாஜி பூங்காவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. சிவாஜி பூங்காவில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி என முன்னாள், இந்நாள் வீரர்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். 

மேலும் இன்று நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கருப்பட்டை அணிந்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை