87 வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

Advertisement

இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. முதலில் குரூப் பிரிவு போட்டிகள் வரும் மார்ச் 18ஆம் தேதி வரையும். பின்னர், மே இறுதியில் நாக் அவுட் சுற்று போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கவுகாத்தியில் நடைபெற்று வரும் குரூப் ஹெச் பிரிவில் தமிழக அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தமிழக வீரர்கள் சிறப்பாக பந்துவீச டெல்லி அணியில் துருவ் சோரே 1 ரன்னிலும், ஹிம்மட் சிங் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் டெல்லி அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது.

இதன் பின்னர், அண்டர் 19 கேப்டன் யாஷ் துல்லும், நிதிஷ் ராணாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நிதிஷ் ராணா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யாஷ் துல் அரைசதம் விளாசினார். தனது அபாரமான ஷாட்கள் மூலம் தமிழக அணிக்கு யாஷ் துல் நெருக்கடி தந்தார்.

தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய யாஷ் துல், அபாரமாக சதம் விளாசினார். இறுதியில் 113 ரன்கள் யாஷ் துல் அடித்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். யாஷ் துல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 54 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலியும் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு ரஞ்சி கோப்பையில் கலக்கினார்.

இதனால் விராட் கோலிக்கு இந்திய அணியில் விரைவில் இடம் கிடைத்தது. தற்போது அதே பாணியில் யாஷ் துல்லும் விளையாட, விரைவில் அவருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கலாம். இதனால் டெஸ்ட் அணியில் உள்ள சீனியர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் அண்டர் 19 கேப்டனும், மும்பை அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News