ஐபிஎல் 2022: அடுத்தடுத்த 4 சிக்சர்கள்; ‘பேபி ஏபி’ மிரட்டல்!

Updated: Wed, Apr 13 2022 22:50 IST
Image Source: Google

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தார். அவர் 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் திலக் வர்மா பாட்னர்ஷிப் அமைத்தனர். 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. பிரேவிஸ் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார்.

 

இந்த நிலையில், ராகுல் சஹார் 9ஆவது ஓவரை வீசினார். முதல் பந்தில் திலக் வர்மா 1 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் பிரேவிஸ் பவுண்டரி விளாசினார். கடைசி 4 பந்துகளையும் அவர் சிக்ஸருக்குப் பறக்கவிட அந்த ஓவரில் மட்டும் மும்பைக்கு 29 ரன்கள் கிடைத்தன.

சற்று முன்பு பிரேவிஸ் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஒடீன் ஸ்மித் பந்தில் ஆட்டமிழந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை