'நாங்கள் பந்துவீச்சில் சொதப்பிவிட்டோம்' - டேவிட் வார்னர்

Updated: Mon, Apr 12 2021 13:16 IST
We failed to execute plans while bowling: Warner (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. 

இப்போட்டிக்கு பிறகு பேசிய எஸ்.ஆர்.எச். கேப்டன் டேவிட் வார்னர், “சென்னை போன்ற ஒரு பிட்ச்சில் கேகேஆர் இவ்வளவு ரன்களை எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மைதானத்திற்கு ஏற்றவாரு ஷாட்களைத் தெர்வு செய்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். 

மேலும் இப்போட்டியில் நாங்கள் ஆரம்பம் முதலே ரன்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். அதிலும் கடைசி சில ஓவர்களில் பந்துவீச்சில் சொதப்பியதே எங்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் இம்மைதானத்தில் விளையாடும் பிற போட்டிகளில் நாங்கள் செய்த தவறுகளை சரிசெய்து மீண்டுவருவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை