அண்டர் 19 உலகக்கோப்பை: வெற்றி குறித்து பேசிய யாஷ் துல்!

Updated: Sun, Feb 06 2022 13:41 IST
Image Source: Google

யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி அண்டர் 19 உலகக்கோப்பையில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணிதான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எனினும் இந்திய பந்துவீச்சாளர்கள் ரவிக்குமார் 4 விக்கெட்களும், ராஜ் பவா 5 விக்கெட்களும் கைப்பற்ற அந்த அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி எந்தவித பதற்றமும் இன்றி சீரான இடைவெளியில் ரன்களை உயர்த்தியது.

இறுதியில் ராஜ் பவா 35 ரன்கள் கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைக்க 47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் முன்னாள் கேப்டன் விராட் கோலி அட்வைஸ் இருந்துள்ளார். அரையிறுதி வென்றவுடன் இந்திய அணிக்கு காணொளி காட்சி மூலம் அறிவுரைகள் கூறியிருந்த விராட் கோலி, இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும் கேப்டன் யாஷ் துல்லிற்கு தொடர்பு கொண்டு ஃபீல்டிங்கில் சில அட்வைஸ்களை செய்ததாகவும், அதன்படியே இங்கிலாந்தை சுருட்டியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து பேசியிருந்த யாஷ் துல், “விராட் கோலி போன்ற சீனியர் வீரர் எங்களுக்கு அட்வைஸ் வழங்கியது பெரும் நம்பிக்கையை கொடுத்தது. அவர் என்னிடம் சில முக்கிய அட்வைஸ்களை வழங்கியுள்ளார். ஆட்டத்தின் அடிப்படை என்ன, அழுத்தங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என அறிவுரைகளை கூறினார்” என்று யாஷ் துல் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை