மூன்று நாளில் ஆட்டம் முடியுமா? பிட்ச் பராமறிப்பாளர் பதில்!

Updated: Thu, Nov 25 2021 16:04 IST
Will Green Park pitch in Kanpur be a rank turner? Curator explains (Image Source: Google)

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது. இந்நிலையில் இந்தப் பிட்ச் எப்படி இருக்கும் என்று கியூரேட்டர் விளக்கம் அளித்துள்ளார்.

கிரீன் பார்க் பிட்ச் கியூரேட்டர் ஷிவ்குமார் கூறும்போது, “பிட்ச் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பிசிசிஐயிடமிருந்தோ இந்திய அணியிடமிருந்தோ எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லலை. இது ஒரு பெரிய விஷயம், கோலி, ரவிசாஸ்திரி இருந்திருந்தால் முதல் நாள் முதல் ஒருமணி நேரத்திலேயே குழியில் பட்டு பந்து திரும்பி எகிற வேண்டும் என்று கூறியிருப்பார்கள். பந்துகள் திரும்புவதில் தவறில்லை, ஆனால் இரு அணிகளுக்கும் சாதகமான பிட்சைத் தயாரிக்க வேண்டும்.

உடனே அஸ்வின் கூறுவார் அங்கு வேகப்பந்து பிட்ச் அமைக்கிறார்களே என்பார், அது மிக மோசமான வாதம், வேகப்பந்து வீச்சு இரண்டு அணிகளுக்கும் சாதகமானதுதான், ஆனால் குழிப்பிட்ச் ஒரு அணிக்கு மட்டுமே சாதகமானது, அது இந்திய அணிக்குச் சாதகமானது.

ஆனால் இம்முறை பிட்ச்கள் முதல் ஓவரிலிருந்தே திரும்ப வேண்டும் என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. எனவே நல்ல பிட்சை மனதில் கொண்டு பிட்ச் தயாரித்துள்ளேன்.

பிட்ச் போட்டி தொடங்கியவுடனேயே பெயர்ந்து வரும் ரகம் அல்ல. நவம்பர் மாதம் என்பதால் ஈரப்பதம் பிட்சை நன்றாக இறுக்க பிடித்து வைத்திருக்கும். வெயில் அடித்து காய்ந்தால்தான் 2ஆம் நாள் பிட்சில் பந்துகள் திரும்பும்.

சில போட்டிகள் 3 நாட்களுக்குள் முடியக் காரணம் நவீன பேட்டர்களில் சிலர் டி20 போட்டியில் ஆடி ஆடி அதே போல் ஆடி அவுட் ஆவதுதான் காரணம். இந்தப் போட்டி நிச்சயம் 3 நாட்களில் முடியாது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை