மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!

Updated: Thu, Mar 24 2022 14:37 IST
Image Source: Google

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சித்ரா அமீன், சித்ரா நவாஸ் ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இதனால் 41.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 32 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கேத்ரின் பர்ண்ட், சோஃபி எக்லஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து மகளிர் அணி டேனியல் வையட்டின் அதிரடியான ஆட்டத்தினால் 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனியல் வையட் 68 பந்துகளில் 76 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை