Aarya desai
ரஞ்சி கோப்பை 2025: கேரளா அணி 457 ரன்களில் ஆல் அவுட்; ரன் குவிப்பில் குஜராத் அணி!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேரளா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டௌகளை இழந்த நிலையில், 6ஆவது விக்கெட்டிறு களமிறங்கிய முகமது அசாருதீன் அபாரமான சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 177 ரன்களைக் குவித்தார். அவரைத் தவிர்த்து கேப்டன் சச்சின் பேசி 69 ரன்களையும், சல்மான் நிஷார் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Aarya desai
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24