Adam zampa
கரோனா அச்சுறுத்தல் : ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளனர்.
இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், "ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகின்றனர். வரும் ஐபிஎல்லில் அவர்கள் விளையாட மாட்டார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அவர்களின் முடிவை மதிக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்" என ட்வீட் செய்துள்ளது.