As royal challengers bengaluru
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் எனவும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மருத்துவ செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்ததார். இந்த நிலையில், அர்சிபி அணி நிர்வாகமும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Related Cricket News on As royal challengers bengaluru
-
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆர்சிபி நிர்வாகம்!
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
-
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்!
ஆர்சிபி வெற்றி பேரணியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர். ...
-
ஆர்சிபி வெற்றி பேரணி: கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு; 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட வெற்றி பேரணியின் போது கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த பிளெசிங் முஸரபானி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டிக்கு முன்னதாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானி ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். ...
-
நாங்கள் தோல்வியைத் தழுவியது நல்லது - ஜித்தேஷ் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் 20-30 ரன்கள் கூடுதலாக கொடுத்ததே தோல்விக்கு காரணம் என ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக டிம் செஃபெர்டை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக நியூசிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் டிம் செஃபெர்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பிளெசிங் முஸரபானியை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடிக்கு பதிலாக பிளெசிங் முஸரபானியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
வீரர்கள் மீண்டும் உற்சகமாகவும், உத்வேகத்துடனும் உள்ளனர் - ஆண்டி ஃபிளவர்!
அணி மீண்டும் உற்சாகமடைந்துள்ளதாகவும், 2025 ஐபிஎல் லீக் கட்டத்திற்கு வலுவான முடிவைப் பெற மிகவும் உத்வேகத்துடன் இருப்பதாகவும் ஆர்சிபி அணி பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணி முகாமில் இணைந்த விராட் கோலி - காணொளி!
எஞ்சிவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூருவில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் முகமில் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் போட்டிகளை தவறவிடும் ஜோஷ் ஹேசில்வுட்!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆர்சிபி அணியின் கேப்டனாகும் ஜித்தேஷ் சர்மா?
ரஜத் படிதார் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் இந்த அணியில் சேர விரும்புகிறேன் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எந்த அணியில் சேர விரும்புகிறேன் என்ற தனது விருப்பத்தை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மயங்க் யாதவை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தேவ்தத் படிக்கல் விலகியதை அடுத்த இந்திய வீரர் மயங்க் யாதவ்வை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24