Asia cup 2010
கம்பீருடனான மோதல் குறித்து மனம் திறந்த காம்ரன் அக்மல்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல், போட்டியின்போது ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். கடந்த 2010 ஆசிய கோப்பை போட்டியின் நடுவே இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீருக்கும் இவருக்கும் இடையே அனல் பறந்த வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. தற்போது இதுகுறித்து நினைவுகூர்ந்த கம்ரான் அக்மல், இருவருக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை சொல்லபோனால் அன்றைய வாக்குவாதம் தவறான புரிதலின் காரணமாகவே நடைபெற்றது எனக் கூறியுள்ளார்.