Asia cup 2022
பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து கிரக்கெட் வர்ணணையாளரிடம் பேசிய ரோஹித் சர்மா, தாங்களும் பந்துவீச தான் இருந்தோம் என்று கூறினார்.
தற்போது பேட்டிங் செய்வதால் தொடக்கம் முதலேயே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ரோஹித் சர்மா கூறினார். கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு காரணமே ரோஹித் சர்மாவும், கேஎல் ராகுலும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததால் தான். இதே போன்று ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றிலும் கேஎல் ராகுல் கோல்டன் டக்காகி வெளியேறினார். இதனால் இந்த ஜோடி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.